தமிழ்நாடு

எண்ணெய் லாரி கவிழ்ந்து சென்னையில் விபத்து- அடையாறில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published

on

சென்னையில் இன்று மதியம் அடையாறு அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் அடையாறு பகுதியில் அடையாறு மேம்பாலம் கடந்து சென்ற கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் லாரியில் இருந்து கச்சா எண்ணெய் கொட்டி பரவியது. இதனால் ஆந்தப் பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. எண்ணெய் முழுவதும் சாலையில் கொட்டியதால் மற்ற வாகனங்களால் அந்த சாலையில் நகர முடியவில்லை.

இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் எண்ணெய்யை துடைக்கும் பணிகள் துரித கதியில் தொடங்கப்பட்டன. சாலையின் ஒரு புறம் மட்டும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. வாகன நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவித்தன.

Trending

Exit mobile version