சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 3வது தயாரிப்பு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் வாழ்.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படத்தையும், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தையும் தயாரித்த சிவகார்த்திகேயன், மூன்றாவது படத்தை அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் தயாரிக்கவுள்ளார்.

அதன் அறிவிப்பை நேற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயன் அறிவித்தார்.

வாழ் என வைக்கப்பட்டுள்ள படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு படம் நிச்சயம் படக்குழுவை வாழவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருவி எனும் தரமான தமிழ் படத்தை கொடுத்த அருண் பிரபு புருஷோத்தமன் நிச்சயம் அடுத்த லெவல் படத்தை சிவகார்த்திகேயன் பேனரில் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

seithichurul

Trending

Exit mobile version