செய்திகள்
தி நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி… அதிகாரிகள் நடவடிக்கை…..
துணிக்கடை என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என நினைவு வரும் அளவுக்கு பல ஊர்களிலும் தங்கள் கிளைகளை பரப்பியுள்ளது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சென்னை தி.நகர் பகுதியில் இந்த நிறுவனத்தில் பல கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் பெற்ற ரூ.400 கோடிக்கான கடன் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா நகைகடையையும் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகே ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.