வேலைவாய்ப்பு

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை!

Published

on

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 52. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 52

வேலை: பதிவறை எழுத்தர் – 08
மாத சம்பளம்: ரூ.15,900 – 50,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: அலுவலக உதவியாளர் – 30
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வேலை: இரவு காவலர் – 11
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வேலை: துப்புரவுப் பணியாளர் – 03
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
வயது : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விழுப்புரம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18. 03.2019

seithichurul

Trending

Exit mobile version