தமிழ்நாடு
பேச விடாமல் உறுப்பினர்கள் முழக்கம்: திடீரென வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்
பொதுக்குழுவில் ஓபிஎஸ் பேச முற்பட்டபோது அதிமுக தொண்டர்கள் கூச்சல் குழப்பத்தால் பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பொதுக்குழு கூட்டம் கூடியதும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து பொதுக்குழுவில் பேசுவதற்காக ஓபிஎஸ் எழுந்த போது அவரைப் பேசவிடாமல் அதிமுக நிர்வாகிகள் பலர் கூச்சலிட்டனர்.
இதனை அடுத்து ஓபிஎஸ் பொதுக் குழுவில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் இன்று நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் அறிவித்துள்ளார்.
ஜூலை 11ல் நடைபெறும் அடுத்த பொதுக்குழுவில் நிச்சயம் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கேபி முனுசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை கட்டுப்படுத்தாது என்பதால் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.