தமிழ்நாடு
முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் கைது!
முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் வாலாஜா சாலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து உள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தனர் என்பதும் திமுக அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.