கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்த இந்தியா!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்தது.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கை நோக்கி அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 48.3 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 251 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்திய அணி சார்பாகா ஜடேஜா மட்டும் அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றதால் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி 11-ம் தேதி நடைபெறும். அதிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version