வேலைவாய்ப்பு

செவிலியர்கள் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Published

on

செவிலியர்கள் படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 90,000 ஊதியத்தில் சவுதி அரேபியாவில் வேலை காத்துக் கொண்டு இருப்பதாகச் சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

செலிவிலியர்கள் தேவை: பொதுவாகவே, செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் பணியிடங்கள் தேர்வுகள் மூலமே நிரப்பட்டும். இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில் சவுதி அரேபிய நாட்டின், ரியாத் நகரிலுள்ள கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் பி.எஸ்.சி/எம்.எஸ்.சி/பி.எச்.டி தேர்ச்சி பெற்ற மூன்று வருடப் பணி அனுபவத்துடன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 34 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவை

 நேர்முகத் தேர்வு: நாளை 28.10.2018 முதல் 31.10.2018 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்குத் தொலைப்பேசி அழைப்பு மூலம் அழைக்கப்படுவார்கள்.

கல்வித்தகுதி: எம்.எஸ்.சி, மற்றும் பி.எஸ்.சி முடித்த செவிலியர்

மாதம் சம்பளம்: ரூ.80,000/- to ரூ.90,000/

தகுதி: மாத ஊதியமும், இலவச விமானச் சீட்டு, உணவு, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும் முழு விவரங்களுக்கு ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.

seithichurul

Trending

Exit mobile version