இந்தியா
தகாத வார்த்தை பேசிய டாக்டர், கன்னத்தில் அறைந்த நர்ஸ்: உபி மருத்துவமனையில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் குறித்து நர்சிடம் விசாரித்துக் கொண்டிருந்த டாக்டர் ஒருவர், திடீரென தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரின் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்டர் நர்சை திருப்பித் தாக்கினார். இதனையடுத்து அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக மருத்துவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தகாத வார்த்தைகள் பேசிய டாக்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நர்ஸ் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.