இந்தியா
போன் பேசிக்கொண்டே தடுப்பூசி போட்ட பெண்: தவறுதலாக இரண்டு டோஸ் போட்டதால் பரபரப்பு!
![Corona vaccine side effects - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Corona-vaccine-side-effects.jpg)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் நர்ஸ் ஒருவர் போனில் பேசிக்கொண்டே ஒரே நபருக்கு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு நடந்தது. அப்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் குமாரி என்ற பெண் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அவருக்கு அர்ச்சனா என்ற நர்ஸ் போன் பேசிக் கொண்டே கொரோனா தடுப்பு ஊசி போட்டதாக தெரிகிறது.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் கமலேஷ் குமாரி தனியாக அமர வைக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கமலேஷ் குமாரி தனது கை வீக்கம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வலி அதிகமாக இருப்பதாகவும் கூறினார். அப்போதுதான் அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ் போனில் பேசியபடியே 2 டோஸ் போட்டு உள்ளது தெரிய வந்தது.
இது உறுதி நர்சிடம் அந்த பெண் கூறியபோது அவர் கோபமாக அந்த பெண்ணை பேசி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சுகாதார அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.