உலகம்
பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கு.. பார்க்க வந்த கன்னியாஸ்திரிகளை இப்படியா செய்வது?
கொச்சி: கேரளாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் நேற்று குரியகோஸ் இறுதிச்சடங்கு நடந்தது.
இதற்கு பிராங்கோவிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர்.ஆனால் இவர்கள் யாரும் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
அங்கு முதலில் உள்ளே அனுமதிக்கப்பட்ட இவர்கள், பின் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு உள்ளனர். சில கன்னியாஸ்திரிகளை அங்கிருந்த ஆட்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர். இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கண்ணீருடன் வெளியேறினார்கள்.