இந்தியா
இதை செய்தால் உலகை விட்டே கொரோனா சென்றுவிடும்: நியூமராலஜி நிபுணர்
![Coronavirus, virus which causes SARS and MERS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/coronavirus-image-iStock-628925532-1200px.jpg)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மனித இனமே மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவது எப்படி என்று அனைத்து நாடுகளின் அரசுகளும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்
உலக சுகாதார மையமே கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் நியூமராலஜி மூலம் உலகை விட்டே கொரோனாவை விரட்டி விடலாம் என நியூமராலஜி நிபுணர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நியூமராலஜிப்படி corona என்பதை caronaa என்றும், covid 19 என்பதை covviyd 19 என்று மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு மாற்றி பொது இடங்களில் பயன்படுத்தினால் ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் மட்டும் இல்லாமல் உலகை விட்டு கொரோனா சென்றுவிடும் என்றும் ஆனந்த ராவ் என்ற நியூமராலஜி நிபுணர் கூறியுள்ளார். நியூமரால்ஜி நிபுணரின் இந்த இந்தப் போஸ்டர் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.