தமிழ்நாடு
தேசிய திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு: புதிய தேர்வு தேதி இதுதான்!
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சற்றுமுன் சற்றுமுன் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மேலும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜனவரி 25 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அதேபோல் பள்ளிகளில் நேரடியாகவும் பெற்று கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய திறனாய்வு தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாதம் ரூபாய் 1,250 உதவித்தொகை கிடைக்கும் என்றும் அதன்பின்னர் முதுநிலை படிப்பு படிக்கும் போது 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.