வணிகம்
வாட்ஸ்ஆப் பே சேவைக்கு அனுமதி.. அதிர்ச்சியில் கூகுள் பே, பேடிஎம்..!
கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்று இனி வாட்ஸ் மூலமாகவும் பணம் அனுப்பலாம்.
வாட்ஸ்ஆப் நிறுவ்னாம் யுபிஐ பணம் பரிமாற்றம் சேவைக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் தற்போது தேசிய பணம் பரிமாற்ற முகமை (NPCI) அனுமதி வழங்கியுள்ளது.
வாட்ஸ்ஆப் மூலமாக யுபிஐ பணம் பரிமாற்ற சோதனை சேவை வழங்கிய போது, இந்தியர்களின் தரவுகள் விற்கப்பட வாய்ப்புள்ளதாகச் சர்ச்சை எழுந்தது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு யுபிஐ சேவைக்கான அனுமதி வழங்குவதற்கு முன், அவர்கள் தரவை சேகரிக்கும் மையத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று மத்திய முடிவு செய்தது.
இதை அடுத்துக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் வாட்ஸ்ஆப் அலுவலகம் திறக்க திட்டமிட்டு வந்த நிலையில், அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகல் யுபிஐ சேவை வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் யுபிஐ சேவை வழங்கி வந்தாலும் அது இந்திய வங்கிகளிடனான கூட்டு சேவையே ஆகும். வாட்ஸ்ஆப் நிறுவனம் நேரடியாக தங்களது யுபிஐ சேவைக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று கூறப்படும் நிலையில், கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலி நிறுவனங்களுக்கு இது கடுமையான போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.