விளையாட்டு

பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகளுக்கு சவுரவ் கங்குலி எதிர்ப்பு!

Published

on

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ஜூன் 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே இந்திய அணியால் உலகக்கோப்பையை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும். மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வந்து இந்தியா மோதாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இதுகுறித்து தெரிவித்தபோது, பாகிஸ்தானுடன் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உறவுகளை மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Trending

Exit mobile version