சினிமா
விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிமன்றம்: விரைவில் கைது!
நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அரசியல் ஆர்வமும் கொண்டவர். இதனால் அவருக்கு சில சிக்கல்களும் நேர்ந்துள்ளன. தற்போது இயக்குநர் சிந்தர் சி இயக்கத்தில் அயோக்கியா படத்தில் நடித்து வரும் விஷாலுக்கு வரும் அக்டோபர் மாதம் அனிஷா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித்தொகையை வருமான வரித்துறையினரிடம் முறையாக செலுத்தவில்லை என இரண்டு முறை வருமான வரித்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விஷால் தரப்பில் வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்ட சம்மன் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு வருமான வரித்துறை எதிர்ப்பு தெரிவித்தநிலையில் இந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதனையடுத்து விஷால் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.