தொழில்நுட்பம்

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நோக்கியா எக்ஸ்7 இந்தியாவில் அறிமுகம்.!

Published

on

நோக்கியா எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட் போன் டீஸர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த டீஸரின் படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன், நோக்கியா எக்ஸ்7 என்ற பெயரில் வெளியிடப்படுமென்ற செய்திகள் கசிந்துள்ளது.

நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், புதிய நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடலை தனது ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளது. அதன்படி நோக்கியா நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 28 தேதி இந்தியாவில் நடைபெறவுள்ள தனது நோக்கியா நிகழ்ச்சியில் புதிய நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காட்ஜெட் செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள தகவலின் படி வரும் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெறும் ரூ.23,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள தனது புதிய டுவீட்டில் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன், டார்க் ரெட் மற்றும் ரோஸி கலரில் அறிமுகம் செய்யப்படுமென்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட் போன் சென்ற மாதம் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version