இந்தியா
வொர்க் ப்ரம் ஹோம் முறையால் தொழில்துறையே கெட்டு போயுள்ளது: விப்ரோ தலைவர் ஆவேசம்..!
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு பல நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்திய போதிலும் இன்னும் சில நிறுவனங்களில் பாதி நாட்கள் வீட்டிலும் பாதி நாட்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்யும் முறையையும் முழுமையாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையையும் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது ஊழியர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது என்றும் டிராபிக் பிரச்சனை காரணமாக பல மணி நேரங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அந்த நேரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவு மிச்சப்படுகிறது என்றும் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஊழியர்களின் சார்பில் கூறப்படும் காரணங்களாக உள்ளன.
சமூக ஊடகங்களில் ஒரு நண்பரை தேடி அவருடன் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரடியாக ஒரு நண்பரிடம் பழகுவதற்கு அதிக வித்தியாசம் இருக்கிறது என்று கூறிய பிரேம்ஜி கிட்டத்தட்ட வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து பணி செய்வது இதற்கு சமமானதாகும் என்றும் மக்கள் அலுவலகத்திற்கு வந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.