Connect with us

இந்தியா

வொர்க் ப்ரம் ஹோம் முறையால் தொழில்துறையே கெட்டு போயுள்ளது: விப்ரோ தலைவர் ஆவேசம்..!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு பல நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்திய போதிலும் இன்னும் சில நிறுவனங்களில் பாதி நாட்கள் வீட்டிலும் பாதி நாட்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்யும் முறையையும் முழுமையாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையையும் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது ஊழியர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது என்றும் டிராபிக் பிரச்சனை காரணமாக பல மணி நேரங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அந்த நேரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவு மிச்சப்படுகிறது என்றும் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஊழியர்களின் சார்பில் கூறப்படும் காரணங்களாக உள்ளன.

ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் மனநிலையிலிருந்து அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் என்பது ஊழியர்களுக்கு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் அலுவலகத்திற்கு வர தொடங்கினால் தான் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும் நிறுவனம் மேம்படுத்தப்படும் என்றும் குழுவாக இருந்து பணி செய்வதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Indian workers work longest compared to other countryபெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகும் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளன என்றும் இது முழுமையாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்வதால் தொழில் துறையே கெட்டுப் போய் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ஒரு நண்பரை தேடி அவருடன் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரடியாக ஒரு நண்பரிடம் பழகுவதற்கு அதிக வித்தியாசம் இருக்கிறது என்று கூறிய பிரேம்ஜி கிட்டத்தட்ட வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து பணி செய்வது இதற்கு சமமானதாகும் என்றும் மக்கள் அலுவலகத்திற்கு வந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Indian workers work longest compared to other countryவிப்ரோ நிறுவனத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று நாள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று ஊழியர்களை கேட்டுக் கொண்டது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மை இருந்தாலும் தற்போது முழுமையாக அலுவலகம் வந்து பணி செய்ய வேண்டும் என விப்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!