தமிழ்நாடு
நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்களுக்கு தடை: சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு!
![chennai traffic - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/chennai-traffic.jpg)
சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சென்னை மெரினா உள்பட எந்த கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அதே போல் ஒரு சில சாலைகளில் போக்குவரத்து அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் நாளை இரவு 12 மணிக்குமேல் அத்தியாவசிய போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 31 அன்று இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின் தொடர்ச்சியாக தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்து தவிர மற்ற வாகன போக்குவரத்திற்கு ஜனவரி 1 காலை 5 மணி வரை அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட டிசம்பர் 31 இரவு 12 மணிக்குள் தங்களது பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.