தமிழ்நாடு
மக்கள் தயார்… ஆனால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை…- வருந்தும் அமைச்சர் மா.சுப்ரமணியன்
![ma subramaniam - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/ma-subramaniam.jpg)
தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
அவர், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே பெரும் வருத்ததைத் தான் தருகிறது. நகர்ப் புறங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும், மலைவாழ் பகுதிகளிலும், படிக்காதவர்களும் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால், பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்பது தான் நிதர்சனம்.
1 கோடியே 44 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் இருக்கும் தடுப்பூசிகள் இன்றோடு முடிந்துவிடும். எனவே, போடுவதற்கு நம்மிடம் எங்கேயும் தடுப்பூசிகள் இல்லை’ என்று வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளார்.
வரும் நாட்களில் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தடுப்பூசிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்.