செய்திகள்

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு இனி ‘நோ’ கட்டுப்பாடு..!

Published

on

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இருந்த அத்தனைத் தடைகளும் நாளை முதல் தளர்வு செய்யப்படுகின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. இத்தனைக் காலம் சென்னை புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்களும் அவசர பணி உள்ளவர்கள் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தனர்.

பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் பயணத்துக்கு தடை இருந்தது. தற்போது நாளை முதல் இந்தத் தடைகள் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் வரும் வாரம் முதல் மின் ரயில் சேவை இயக்கப்படும். பயணத்தின் போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version