Connect with us

இந்தியா

இந்தியாவின் முன்னணி வங்கியும் திவாலா? பதறியபடி விளக்கம் அளித்த நிர்வாகம்..!

Published

on

அமெரிக்காவில் உள்ள சிலிகான் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கி ஒன்றும் திவால் ஆனதாக வதந்தி பரவியதை அடுத்து அந்த வங்கிக்கு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி என்று கூறப்படும் எஸ்விபி வங்கி, வைப்புத்தொகை இருப்பு குறைந்ததால் திவால் ஆகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த நெருக்கடியில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் எஸ்விபி வங்கி திவால் குறித்த செய்தி இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பையைச் சேர்ந்த எஸ்விசி என்ற வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எஸ்விபி வங்கி திவால் அடைந்ததாக செய்திகள் வெளியானதை பலர் தவறாக எஸ்விசி வங்கி தான் திவால் ஆகிவிட்டது என்று தவறாக புரிந்து கொண்டனர். இதை வைத்து ஒரு சிலர் வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட நிலையில் பதறியபடி எஸ்விசி வங்கி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் எஸ்விசி வங்கி 100 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கி என்றும் இந்தியாவில் மட்டுமே இந்த வங்கி செயல்படுகிறது என்றும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இதற்கு கிளைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது திவால் ஆகி இருப்பது அமெரிக்காவை சேர்ந்த எஸ்விபி வங்கி என்றும் அந்த வங்கிக்கும் எங்கள் எஸ்விசி வங்கிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தவறாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் எங்கள் வங்கி நம்பிக்கையான வங்கி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான புரிதல் காரணமாக ஏராளமான எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை அவசர அவசரமாக எடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான பின்னரே வாடிக்கையாளர்கள் நிம்மதியை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!