தமிழ்நாடு
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் தேவைப்படுபவர் மட்டும் பொதுத் தேர்வு எழுதலாம் என்றும் பொதுத்தேர்வு அனைவரும் எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கூடுதல் மதிப்பெண்களுக்காக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் ஒரு செய்தி கிட்டத்தட்ட அனைத்து இணைய தளங்களிலும் வெளியானது.
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களுக்காக பொதுத்தேர்வு என்ற தகவலில் உண்மை இல்லை என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்ற உத்தரவில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. இதனை அடுத்து கூடுதல் மதிப்பெண்களுக்காக பொதுத்தேர்வு என்பது இல்லை என்பது உறுதியாகி உள்ளது.