சினிமா

அஜித் இருக்க பயமேன்.. துணிவு நள்ளிரவு காட்சிக்கு சிக்கல் இல்லை.. கலெக்டர் உத்தரவையே மாத்தியாச்சு!

Published

on

தல அஜித்தின் துணிவு படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிடக் கூடாது என திடீரென புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தது ஆயிரக் கணக்கில் காசு போட்டு டிக்கெட்டுகளை வாங்கிய அஜித் ரசிகர்களின் அடி வயிற்றை கலக்க வைத்தது.

ஒரு மணிக்கெல்லாம் ஷோவை போட அனுமதிக்க முடியாது என்றும் வாரிசு படம் வெளியான பின்னர் 5 மணிக்கு ஷோவை போட்டுக்கோங்க என்பது போல புதுச்சேரியில் உத்தரவு போட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் தியேட்டர் அதிபர்கள் முறையிட்டுள்ளனர்.

துணிவு படத்தின் முதல் நாள் நள்ளிரவு காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. அஜித் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படியொரு உத்தரவை அமல்படுத்தினால் பெரிய சிக்கல் வரும் என தியேட்டர் உரிமையாளர்கள் முறையிட்ட நிலையில், நள்ளிரவு 1 மணி காட்சிக்கு புதுச்சேரியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அஜித் படத்துக்கு எந்தவொரு சிக்கலும் வராது என்றும் போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் தான் இருக்கிறார் என்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version