தமிழ்நாடு

3 நாட்களாக மின்சாரம் இல்லை: மந்தைவெளி மக்கள் ஆவேசம்

Published

on

சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சார பணிகள் நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரத்தை மின் வாரிய அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பகல் நேரத்திலும் விட்டுவிட்டு தான் மின்சாரம் வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஐடி ஊழியர்கள் பெரும் அவஸ்தையில் உள்ளனர்.

இந்த நிலையில் மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் அடைத்துக்கொண்டு டாய்லெட் கூட போக முடியவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்தால் தண்ணீர் தேங்கி இருப்பதால் தங்களால் தோண்டி பணி செய்ய முடியாது என்றும் மழை நின்று தண்ணீர் சென்றவுடன் தான் பணி செய்ய முடியும் என்று பதில் கூறுவதாக கூறுகின்றனர்.

சென்னையில் மின்சாரம் தொடர்ச்சியாக கிடைக்க செய்ய வேண்டியது மின் வாரிய அதிகாரிகளின் பணியாக இருக்கும் போது அவர்கள் அசட்டையாக பதில் கூறுவதாகவும் பொதுமக்கள் ஆவேசத்துடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version