சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

Published

on

இந்தமுறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. பல சிக்கல்களை தாண்டி நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

நடிகர் சங்கத்தில் இருந்து சில நீக்கப்பட்டதின் பின்னணியில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து அனைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து விஷால், நாசர் தரப்பு சட்டப் போராட்டம் நடத்தி கடந்த ஜூன் 23-ஆம் தேதி தேர்தலை நடத்தியது. இதனையடுத்து தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆதிகேசவலு, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து வைக்கவும் உத்தரவிட்டதையடுத்து நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கியில் அவை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. அப்போது ஜெயமணி, சுமதி, சாந்தி உள்ளிட்ட 10 நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களையும் இந்த வழக்கில் இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் விஷால் தரப்பு தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி அளிக்க கோரிக்கை வைத்தது. ஆனால் இதனை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version