விளையாட்டு

குழந்தையைப் பார்க்க நடராஜனுக்கு ‘நோ’ கோலிக்கு மட்டும் ‘ஓகே’வா?

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், துபாய் ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்ததும் அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய போட்டியில் விளையாடச் சென்றுவிட்டார். இதனால், நவம்பர் மாதம் பிறந்த தனது முதல் குழந்தையை இதுவரையில் பார்க்காமல் உள்ளார். புகைப்படம் எடுக்க கூடாது என்பதால் குழந்தையின் புகைப்படத்தைக் கூட வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் நடராஜன்.

ஆனால், கேப்டன் கோலி-க்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பாதியிலேயே இந்தியாவுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார் கோலி. பிறக்கப்போகும் குழந்தையைப் பார்க்க கோலிக்கு அனுமதி கொடுக்கப்பட்ட போது பிறந்த குழந்தையைப் பார்க்க நடராஜனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபோல் கிரிக்கெட் அணியில் வேற்றுமை காட்டப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Trending

Exit mobile version