செய்திகள்

தமிழகத்தில் ஓமிக்ரான் சிகிச்சை பெறுபவர் யாருமில்லை.. மகிழ்ச்சி செய்தி….

Published

on

தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.

ஒருபக்கம் ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக காவல் துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிம்மதி தரும் செய்தியாக தற்போது ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட மருத்துவமனையில் இல்லை என்கிற மகிழ்ச்சி செய்து கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்கரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 179 பேரும் நலமடைந்து விடு திரும்பி விட்டனர். தற்போது ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version