சினிமா செய்திகள்

இதுக்கு மேல பிரியங்கா சோப்ராவை யாரும் ட்ரோல் செய்ய முடியாது!

Published

on

மெட் காலா நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அந்நாட்டு நேரப்படி திங்கள் இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்து கொண்டார்.

2017ம் ஆண்டு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்கிறார்.

கடந்த ஆண்டு கத்தோலிக தீமுடன் களைகட்டிய மெட் காலா நிகழ்ச்சி கிறிஸ்துவ மதத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு கேம்ப் எனும் தீமுடன், ஹாலிவுட் படங்கள், மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல நடிகைகள், ஃபேஷன் மாடல்கள், பாடகிகள் கலர்ஃபுல் கவர்ச்சி உடையில் வந்து நிகழ்ச்சியை களைகட்டினர்.

நடிகை பிரியங்கா சோப்ரா, ஆலீஸ் இன் தி வொண்டர் லேண்ட் படத்தில் வரும் மேட் ஹேட்டர் போல படு பயங்கரமாக மேக்கப் போட்டுக் கொண்டு பேய் போல வந்து காட்சியளித்தார்.

அவரது புகைப்படங்கள் உலகளவில் டிரெண்டானது. நம்ம ஊரு மீம் க்ரியேட்டர்களுக்கு பிரியங்காவின் புகைப்படங்கள் சரியான தீனியாக அமைந்தது.

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மீசைக்கு கீழ் பிரியங்காவின் முடியை மேட்ச் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version