தமிழ்நாடு
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இன்று பிற்பகல் 3 மணியுடன் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில் குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
டிடிவி தினகரனின் அமமுக ஒரு பதிவு செய்யப்படாத கட்சி. அந்த கட்சிக்கு பொதுச்சின்னமான குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மல்லுகட்டுகிறது. ஆனால் தினகரன் தரப்போ நாங்கள் அதிமுகவின் ஒரு அணியினர் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. அதிமுக மீதான எங்கள் உரிமையை பெற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் அமமுகவை எங்களால் பதிவு செய்ய முடியாது. எனவே நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால் இந்த வழக்கின் விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இரு தரப்பிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இறுதியாக அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று தினகரன் தரப்பு கோரிக்கையான குக்கர் சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் குக்கர் அல்லாது வேறு ஒரு சின்னத்தை தினகரன் தரப்புக்கு பொதுச்சின்னமாக ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.
வேட்பு மனுத்தாக்கல் முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தினகரன் தரப்புக்கு பொதுச்சின்னம் கிடைக்குமா அல்லது தனி தனி சின்னத்தில் தான் போட்டியிட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம் பொதுச்சினத்தை தினகரன் தரப்புக்கு ஒதுக்கு வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ள போதிலும் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.