சினிமா செய்திகள்

நோ திருமணம்.. ஆல்வேஸ் சிங்கிள் – ஓவியா!

Published

on

திருமணம் செய்து கொண்டு ஆணுக்கு அடிமையாக வாழ தன்னால், முடியாது என்றும், தற்போது இருப்பது போல் எப்போதும் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி என்றும் நடிகை ஓவியா அதிரடியாக கூறியுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஆனால், அதற்கு பிறகு, அவர் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும், எந்த படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. சுந்தர்.சியின் கலகலப்பு படம் லாபத்தை கொடுத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா கலந்து கொண்டபோது, அவருடைய எதார்த்தமான செயல்கள் தமிழக மக்களிடையே அவருக்கு ரசிகர் பட்டாளத்தையும் ஓவியா ஆர்மியையும் உருவாக்கியது.

ஓவியா ஆர்மி உருவான நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா, களவாணி 2 படத்தில் நடித்தார். ஆனால், 3வது சீசன் வந்துவிட்ட நிலையில், தற்போது தான் அந்த படம் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஓவியா ”எனக்கு ஆண் துணையே வேண்டாம். நான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை. தனியாக இருக்கும் போதே ஜாலியாக உணர்கிறேன். மேலும், இப்படியே தொடர விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version