தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் கூட்டங்களாலும், குடும்ப நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர் மாஸ்க் அணிவது இல்லை என்பதால் தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் மீண்டும் ஊரடங்கு அமல் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திக்கு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version