தமிழ்நாடு
தேர்தலுக்கு பின் ஊரடங்கா? சுகாதார செயலாளர் பேட்டி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம் என்பதும் அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காரணமாகவும் பொதுக்கூட்டம் காரணமாகவும் தனிமனித இடைவெளியின்றி பொது மக்களும் அரசியல்வாதிகளும் நடந்துகொண்டதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பின் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவதை அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தேர்தலுக்குப்பின் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனால் அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.