இந்தியா
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாற்றமா? ரிசர்வ் வங்கி விளக்கம்
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமே தற்போது இருந்துவரும் நிலையில் இனி ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உட்பட ஒரு சில தலைவர்களின் படங்கள் இடம் பெறும் என்று இன்று காலை செய்திகள் வெளியானது.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம்பெறும் என்றும் காந்தி படத்திற்கு மாற்றாக வேறு தலைவர்களின் படத்தை இடம்பெற வைக்கும் திட்டம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை ரூபாய் நோட்டு அச்சடிக்க தொடங்கிய நாள் முதல் இன்றுவரை அனைத்துவகை கரன்சிகளிலும் காந்தி படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மாற்றாக வேறு தலைவர்களின் படங்களை மாற்ற வேண்டும் என்று இடையில் சில பரிசீலனை செய்யப்பட்டாலும் இன்றுவரை மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.