சினிமா
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? – வானிலை மையம் கொடுத்த தகவல்
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து என்னும் பொதுமக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு குறைவு என வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. அந்தமானியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், இந்த புயலால் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.