தமிழ்நாடு

இந்த ஆண்டும் இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி விட்டதை அடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பொது தேர்வுக்கான தேதி அட்டவணையும் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி செய்முறை பயிற்சி தேர்வுக்கான தேதி அறிவிக்கப் பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வு இல்லை என அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

ஆனால் அதே நேரத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி இறுதி தேர்வு தொடங்கும் என்றும் மே 13ஆம் தேதி இறுதித்தேர்வு முடிவடையும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version