தமிழ்நாடு
பழனியில் தைப்பூச தினத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா? கலெக்டர் அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் பூச நட்சட்திர தினத்தில் வரும் தைப்பூச தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து முருகனின் திருத்தலங்களிலும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும் என்றும் அதிலும் குறிப்பாக பழனியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்காண பக்தர்கள் காவடி எடுத்து தைப்பூச திருவிழாவை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 18ஆம் தேதி நடைபெறும் தைப்பூச தினத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் தெப்ப உற்சவத்தின்போதும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்று திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு காரணமாக 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு முருக பக்தர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.