தமிழ்நாடு

புயலாக மாற வாய்ப்பில்லை, எனினும் 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு!

Published

on

வங்க கடலில் தோன்றிய உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக வர வாய்ப்பில்லை என்றும் எனினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை மறுநாள் அதாவது நவம்பர் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version