இந்தியா
கொரோனா 4வது அலை உண்டா? இந்திய விஞ்ஞானிகள் தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என இந்திய மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இரண்டாவது கொரோனா மற்றும் மூன்றாவது அலை காரணமாக மிகப்பெரிய அளவில் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து நாடு முழுவதும் இயல்புநிலை தொடங்கிவிட்டது என்பதை பொதுமக்கள் தற்போது நிம்மதியாக வெளியே சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நான்காவது அலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பே இல்லை என மூத்த மருத்துவ நிபுணர் ஜான் ஜேக்கப் என்பவர் தெரிவித்துள்ளார். இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான இவர் இந்தியாவில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாட்டில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தகவல் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.