இந்தியா
கொரோனா 4வது அலை இருக்காது: விஞ்ஞானி கூறும் காரணம் இதுதான்!
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ், கொரோனாவுக்கு முடிவு கட்டி விடும் என புனேவை சேர்ந்த தொற்றுநோய்கள் மருத்துவ நிமிட நரேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரோகித் என்பவருடன் இணைந்து இவர் செய்த ஆராய்ச்சியில் ஒமிக்ரான் வைரஸ் குரோனோ வைரஸை முழுமையாக அழித்துவிடும் என்றும் எனவே கொரோனாவால் நான்காவது அலை ஏற்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தாலும் இந்த பெருந்தொற்றை ஒமிக்ரான் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்றும் அதுமட்டுமின்றி ஸ்பானிஷ்புளு என்ற நோயையும் முழுமையாக ஒமிக்ரான் அழிந்து விடும் என்றும் புரோகித் கூறியுள்ளார்.
இனிமேல் ஒமிக்ரான் மற்றும் ஒமிக்ரான் வைரஸை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும் இந்தியாவில் நான்காவது அலை என்பது இருக்காது என்றும் மருத்துவ முன்னேற்றம் காரணமாக தடுப்பூசி சேர்த்துக்கொள்வதால் ஒமிக்ரான், கொரோனா வைரஸ்கள் இந்தியாவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.