இந்தியா
மேற்குவங்கத்தில் பாஜக வென்றால் நான் தொழிலையே விட்டுவிடுகிறேன்: பிரசாந்த் கிஷோர்
ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 100 சீட்டுக்கு மேல் வென்றால் என் தொழிலையே விட்டு விடுகிறேன். என் நிறுவனமான ஐபேக்கை மூடிவிட்டு நான் வேறு வேலைக்கு செல்கிறேன். இந்த தேர்தல் உத்தி வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தானாகவே விழுந்தால் தான் பாஜக அங்கு வெல்ல முடியும் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் உள்ளன. அதை சரி செய்தாலே அக்கட்சி கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடும்.