கிரிக்கெட்

மீதமுள்ள 3 டி20 போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் அனுமதி இல்லை: அதிரடி உத்தரவு

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை முடிந்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் அகமதாபாத் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் மீதி உள்ள மூன்று போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக உத்தரவை குஜராத் கிரிக்கெட் சங்கம் பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மூன்று போட்டிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் குஜராத் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து குஜராத் கிரிக்கெட் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version