தமிழ்நாடு
மெரீனா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கு அனுமதி இல்லை: சென்னை மாநகராட்சி
சென்னை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நேற்று காவல்துறையினர் திருப்பி அனுப்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடாக சென்னை மெரினாவில் ஜனவரி 2 முதல் அதாவது இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மெரினா மட்டுமன்றி சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்களுக்கு செல்ல அனுமதியில்லை என அறிவித்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டிற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
நேற்று சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 1500 பேர் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.