தமிழ்நாடு
மீண்டும் வேகமெடுத்த நிவர் புயல்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையைக் கடக்கும் எனத் தகவல்!
நிவர் புயல் முதலில் கணித்தது போலவே இன்னும் ஒரு மணிநேரத்தில் தொடங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 11 கிலோ மீட்டர் மணி நேரம் என்று பயணித்த நிவர் புயல், இப்போது ஒரு மணி நேரத்திற்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் பயணித்து வருகிறது.
தற்போது உள்ள நிலவரத்தின் படி புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிவர் புயல் தொடங்கி, காலை 3 மணி வரை கரையைக் கடக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
புயல் அதிகாலை நேரத்தில் கரையைக் கடந்தாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் 110 முதல் 175 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலைக்குள் கரையை கடாந்தாலும், நாளைதான் எந்த அலவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விவரங்கள் கிடைக்கும்.