தமிழ்நாடு
நிவர் புயல் எதிரொலி.. இந்த மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மூடல்!
நிவர் புயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் மட்டும் டாஸ் மாக் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புயல் காரணமாகத் தமிழக முழுவதும் இன்று பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ் மாக் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துவந்தனர்.
இந்நிலையில் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை புதுவைக்கு இடையில் நிவர் புயல் கடக்க உள்ளதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புயலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.