தமிழ்நாடு

புயல் கரையைக் கடக்கும் இடம் மற்றும் நேரத்தில் மாற்றிய நிவர்!

Published

on

நிவர் புயல் சென்னை – புதுச்சேரி இடையில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் ஆகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதி தீவிர புயலாக உருமாறிய நிவர், இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை – புதுச்சேரி இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர், இப்போது 11 கிலோமீட்டராக வேகத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், விழுப்புரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அண்மை தகவல்கள் கூறுகின்றன.

வேகம் குறைந்துள்ளதால், புயல் கரையைக் கடக்க, காலை 3 மணி முதல் 10 வரை ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version