தமிழ்நாடு

அடுத்த மதுரை ஆதினம் நான் தான்: நித்யானந்தா அறிக்கையால் பரபரப்பு!

Published

on

மதுரை ஆதீனமாக கடந்த பல வருடங்களாக இருந்து வரும் அருணகிரிநாதர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த மதுரை ஆதினம் தாம் தான் என நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அருணகிரிநாதர் நித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக பதவி ஏற்க வைத்தார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் நித்யானந்தா திடீரென அடுத்த மதுரை ஆதினம் தான் என அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தாவின் அறிக்கையை அடுத்தே தர்மபுரி ஆதினம் முன்னிலையில் நேற்று மதுரை ஆதினம் அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மதுரை ஆதீனத்திற்கு உரிமை கோரி நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதின நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரையை பொருத்தவரை ஆதினம் பதவி என்பது மிகவும் கௌரவமான பதவி என்பதால் அந்த பதவிக்கு அருணகிரிநாதர் அவர்களை அடுத்து யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version