சினிமா செய்திகள்

தனுஷின் ‘D44′ மூன்று நாயகிகள் அறிவிப்பு: இன்னும் இருவர் யார்?

Published

on

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ‘D44′ திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த படத்தின் ராஷிகண்ணா நடிப்பதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது நாயகி பிரியா பவானி சங்கர் என்றும் இவர் நடிக்க இருப்பதை இன்னும் சில நிமிடங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிக்கவிருக்கும் ‘D44′ படத்தில் மூன்று நாயகிகள் நடித்தாலும் தனுஷ் ஜோடியாக ஒருவர் மட்டுமே நடிக்க இருக்கிறார் என்றும் அவர் யார் என்பதுதான் சஸ்பென்ஸ் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரும் சற்றே வில்லத்தனமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப்பின் தனுஷின் படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்புக் கொண்டுள்ளது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது மாறன் படத்தின் படப்பிடிப்பு உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவிருப்பதை இன்று காலை சன்பிக்சர்ஸ் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version