இந்தியா
ஆந்திராவில் திடீர் போராட்டம்: சாலைகளில் வாகங்களுக்கு தீ வைத்ததல் பரபரப்பு!
ஆந்திர மாநிலத்தில் திடீரென சாலையில் இறங்கி அரசியல்வாதிகள் போராடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்கள் பதவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து வன்முறையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலையின் நடுவே இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தும் கல்லெறிந்து வருவதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் இந்த வன்முறையை செய்வதாகவும் சாலையில் டயர், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளதாகவும் அவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனை அடுத்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.